செய்திகள்

திருவெறும்பூரில் வீட்டு கதவை உடைத்து நகை கொள்ளை

Published On 2018-12-07 15:08 GMT   |   Update On 2018-12-07 15:08 GMT
திருவெறும்பூரில் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 9 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.
திருவெறும்பூர்:

திருவெறும்பூர் திருவேங்கடநகரை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 60). இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இன்று காலை பார்த்த போது ரெங்கசாமியின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

இதைப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். ரெங்கசாமியும் சம்பவம் அறிந்து வீட்டிற்கு விரைந்து வந்தார். 

அப்போது வீட்டில் 9 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது. ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள்  தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News