செய்திகள்
பண்ருட்டியில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ18 லட்சம் மோசடி
பண்ருட்டியில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த மேலப்பாளையம் இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 40). கார் டிரைவர்.
இவர் தனது நண்பரான அன்பழகன் என்பவரின் மகனுக்காக வேலை சம்பந்தமாக திருவள்ளுவர் மாவட்டம் கொரட்டூர் பகுதியை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவரிடம் பேசினார்.
அதற்கு நாராயணமூர்த்தி, முஸ்தபாவிடம் தான் வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் கேட்டார். அதற்கு முஸ்தபா சம்மதித்து நாராயணமூர்த்தியிடம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி பணம் கொடுத்தார். மீதமுள்ள 12 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினர். ஆனால் நாராயணமூர்த்தி வேலைவாங்கி தரவில்லை, பணமும் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் முஸ்தபா புகார் செய்தார். இதையொட்டி நாராயணமூர்த்தி மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். #tamilnews
பண்ருட்டி அடுத்த மேலப்பாளையம் இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 40). கார் டிரைவர்.
இவர் தனது நண்பரான அன்பழகன் என்பவரின் மகனுக்காக வேலை சம்பந்தமாக திருவள்ளுவர் மாவட்டம் கொரட்டூர் பகுதியை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவரிடம் பேசினார்.
அதற்கு நாராயணமூர்த்தி, முஸ்தபாவிடம் தான் வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் கேட்டார். அதற்கு முஸ்தபா சம்மதித்து நாராயணமூர்த்தியிடம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி பணம் கொடுத்தார். மீதமுள்ள 12 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினர். ஆனால் நாராயணமூர்த்தி வேலைவாங்கி தரவில்லை, பணமும் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் முஸ்தபா புகார் செய்தார். இதையொட்டி நாராயணமூர்த்தி மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். #tamilnews