செய்திகள்
ஈரோட்டில் மாவட்டஅளவிலான அறிவியல் கண்காட்சி
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 267 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஈரோடு:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கண்காட்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்பட்டது. இதில் உணவு, பொருட்கள், உலகில் உள்ள உயிரினங்கள், நகரும் பொருட்களும் பொதுமக்களும், வேலை, இயற்கை ஆதாரங்கள், இயற்கை நிகழ்வுகள், கணிதம் ஆகிய 8 தலைப்புகளில் கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியில் 112 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மொத்தம் 267 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை வைத்திருந்தனர். அதில் சிறந்த கண்டுபிடிப்புகளை நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.
ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் முதல் 3 சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல் பரிசாக தலா ரூ.1,500, 2-வது பரிசாக தலா ரூ.1,000, 3-வது பரிசாக தலா ரூ.500 என மொத்தம் 24 மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதேபோல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான வினாடி- வினா போட்டி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. இதில் முதல் இடம் பெற்ற மாணவ- மாணவிகள் கோவை மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கண்காட்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்பட்டது. இதில் உணவு, பொருட்கள், உலகில் உள்ள உயிரினங்கள், நகரும் பொருட்களும் பொதுமக்களும், வேலை, இயற்கை ஆதாரங்கள், இயற்கை நிகழ்வுகள், கணிதம் ஆகிய 8 தலைப்புகளில் கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியில் 112 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மொத்தம் 267 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை வைத்திருந்தனர். அதில் சிறந்த கண்டுபிடிப்புகளை நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.
ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் முதல் 3 சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல் பரிசாக தலா ரூ.1,500, 2-வது பரிசாக தலா ரூ.1,000, 3-வது பரிசாக தலா ரூ.500 என மொத்தம் 24 மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதேபோல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான வினாடி- வினா போட்டி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. இதில் முதல் இடம் பெற்ற மாணவ- மாணவிகள் கோவை மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.