செய்திகள்

செய்யாறு அருகே வாலிபர் மர்ம மரணம்

Published On 2018-12-06 10:31 GMT   |   Update On 2018-12-06 10:31 GMT
செய்யாறு அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:

செய்யாறு சமாதியான் தெருவை சேர்ந்தவர் அக்பர்பாஷா (வயது 33). புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ஷாயினாதி இவர்களுக்கு 1 மகன் 1மகள் உள்ளனர்.

அக்பர்பாஷா நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பல இடங்களில் தேடிவந்தார்.

இந்நிலையில் அக்பர் பாஷா வீட்டின் அருகே உள்ள தனியார் மண்டபத்தின் பின்பக்கம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News