செய்திகள்

காவேரிப்பட்டணம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2018-12-05 16:41 GMT   |   Update On 2018-12-05 16:41 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜெகதாப்பகுதியை சேர்ந்த முத்து(எ)முத்துகுமார்(23) என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது 5க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாலும், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி மகேஷ்குமார், கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரை செய்தார். 

இதனை ஏற்று, முத்துகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். 
Tags:    

Similar News