செய்திகள்

கோவில்பட்டியில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Published On 2018-12-05 14:05 GMT   |   Update On 2018-12-05 14:05 GMT
கோவில்பட்டியில் குடிநீர் தொட்டி, மின் மோட்டார் அறை பழுதுதானதால் இதனை புதுப்பிக்கும் படி நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி ராமலிங்கம் தெருவில் கடந்த 2007-ம் ஆண்டு அப்போதை எம்.பி. சிப்பிபாறை ரவிச்சந்திரன் நிதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி, குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டது. கட்டப்பட்டு 11 ஆண்டுகளான நிலையில், குடிநீர் தொட்டியும், மின் மோட்டார் அறையும் பழுது காணப்பட்டது. இதனை புதுப்பிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து நகராட்சியில் இருந்து ஒப்பந்தம் விடப்பட்டு, குடிநீர் தொட்டியும் முழுவதுமாக இடிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என தனிநபர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ராமலிங்கம் தெருவை சேர்ந்த மக்கள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் நகராட்சிக்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும் என கோஷங்கள் முழங்கினர். 

இதையடுத்து அவர்களிடம் நகராட்சி ஆணையாளர் அச்சையா, பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News