செய்திகள்

செங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2018-12-05 10:19 GMT   |   Update On 2018-12-05 10:19 GMT
செங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்குன்றம்:

செங்குன்றம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் செங்குன்றத்தை அடுத்த கிரான்ட் லைன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர் பெயர் லிங்கேஸ்வரன் என்பதும் வியாசர்பாடி சாஸ்திரிநகரை சேர்ந்த இவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News