செய்திகள்

மேகதாது விவகாரம்- நாளை மறுநாள் தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது

Published On 2018-12-04 16:19 GMT   |   Update On 2018-12-04 16:19 GMT
மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது. #TNAssembly #mekedatuDam
சென்னை:

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது என தகவல் தெரிவிக்கின்றது. #TNAssembly #mekedatuDam
Tags:    

Similar News