செய்திகள்

வாணியம்பாடியில் ரெயிலில் கடத்த முயன்ற 7 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

Published On 2018-12-02 17:20 GMT   |   Update On 2018-12-02 17:20 GMT
வாணியம்பாடியில் ரெயிலில் கடத்த முயன்ற 7 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி:

வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் ஆகியோர் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர்கள் பாலசந்தர், கண்ணன், தேவராஜ், ராம்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஜோலார்பேட்டை, பச்சூர், காட்பாடி உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ரெயில்களில் ரே‌ஷன் அரிசி கடத்துவதை கண்டறிந்து 150 மூட்டைகளில் இருந்த 7 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News