செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Published On 2018-12-01 14:13 GMT   |   Update On 2018-12-01 14:13 GMT
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உயிரிழந்த ராணுவ வீரர் சரவணன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். #JammuKashmir #ArmyJawanSaravanan #EdappadiPalaniswami
சென்னை:

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சரவணன். இவர் மதுரை மாவட்டம் கரிசல்பட்டியைச் சேர்ந்தவர். இவர் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது இறந்த தமிழக வீரர் சரவணன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பு பணியின்போது மரணம் அடைந்த தமிழக வீரர் சரவணன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். மேலும், சரவணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பட்டுள்ளார். #JammuKashmir #ArmyJawanSaravanan #EdappadiPalaniswami
Tags:    

Similar News