செய்திகள்

வாழப்பாடி அருகே பெண் டாக்டரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

Published On 2018-12-01 10:07 GMT   |   Update On 2018-12-01 10:07 GMT
வாழப்பாடி அருகே பெண் டாக்டரிடம் தங்கச்சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சேசன் சாவடியை சேர்ந்தவர் குழந்தைகள் நல மருத்துவர் முருகன் மனைவி லீலாதேவி(வயது 35). இவர், ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் பணி முடிந்ததும், நேற்று மாலை ஆத்தூரில் இருந்து சேசஞ்சாவடிக்கு பேருந்தில் வந்த மருத்துவர் லீலாதேவி, சேசன்சாவடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இணைப் புச்சாலை வழியாக, அவரது வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மருத்துவர் லீலா தேவியை வழிமறித்து, கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மருத்துவர் லீலாவதி புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தங்கச்சங்கலியை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News