செய்திகள்
ஆத்தூர் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயலை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகன் ஒலிபர் (வயது31). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாக வில்லை.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.