செய்திகள்

கம்பம் அருகே கள்ளக்காதலிக்காக மனைவியை சித்ரவதை செய்த கணவன்

Published On 2018-11-29 12:10 GMT   |   Update On 2018-11-29 12:10 GMT
கம்பம் அருகே கள்ளக்காதலிக்காக மனைவியை கொடுமைபடுத்தி சித்ரவதை செய்த கணவன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

கம்பம் அருகே உள்ள கூடலூரில் கே.பி. பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். (வயது 40). இவரது மனைவி கல்பனா (37). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்து இருந்துள்ளார். இது சம்பந்தமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதனால் சுரேஷ் அடிக்கடி தனது மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொடுமைபடுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த வாக்குவாதத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி கல்பனா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

எஸ்.பி. உத்தரவின் பேரில் கூடலூர் வடக்கு போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News