செய்திகள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் மாற்றுகட்சியினர் அமமுகவில் இணைந்தனர்

Published On 2018-11-28 14:11 GMT   |   Update On 2018-11-28 14:11 GMT
பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வேப்பூர் ஒன்றிய மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணையும் விழா பெரம்பலூரில் நடந்தது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வேப்பூர் ஒன்றிய மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணையும் விழா பெரம்பலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி மற்றும் காடூர் கிராமங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட ஆண்கள் திரளாக ஓபிஎஸ், இபிஎஸ் அணி உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் வேப்பூர் நாகராஜன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் குலோத்துங்கன், ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் செல்வகுமார், ஆலத்தூர் வீரமுத்து, பொது குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, ஜெயக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி பொருளாளர் நடராஜன், வேப்பூர் ஒன்றிய துணை செயலாளர் கதிரேசன், நகர செயலாளர் பீமா ரஞ்சித்குமார், இளைஞரணி ஒன்றிய செயலாளர் அருண்குமார், மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News