செய்திகள்
கொடைரோடு அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
கொடைரோடு அருகே கிராம மக்கள் திடீர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.
கொடைரோடு:
கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் உள்ள பூதிப்புரம் கிராமத்தில் ஒரு தனியார் வீடு கட்ட பணி செய்ய முயன்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடம் பொதுவானது என்றும், தனியாருக்கு சொந்தமானது அல்ல என்றும் மதுரை- செம்பட்டி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவல் கிடைத்தவுடன் அம்மையநாயக்கனூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியாருக்கு சொந்தமானதா? பொதுவான இடமா? என வருவாய்த்துறை மூலம் தீர்வு காண வேண்டும், பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.இதனால் ஜம்புதுரைக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.