செய்திகள்

கோவையில் இருந்து 200 மது பாட்டில்கள் கடத்தல் - 2 வாலிபர்கள் கைது

Published On 2018-11-23 17:40 IST   |   Update On 2018-11-23 17:40:00 IST
கோவையில் இருந்து 200 மது பாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி உதவி போலீஸ் சூப்பிரண்டு நவநீதுசர்மா, சோலையூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அட்டப்பாடி கோட்டத்தரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது பெரிய பெட்டியுடன் 2 வாலிபர்கள் நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பெரிய பெட்டியை சோதனை செய்தபோது 200 பாட்டில் வெளிநாட்டு மதுபாட்டில் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சாவடியூரை சேர்ந்த மாரியப்பன் (வயது 27), சாலையூரை சேர்ந்த ராஜேந்திரன் (22) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

கோவையில் உள்ள வெளிநாட்டு மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அட்டப்பாடி ஆதிவாசி மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தியதாக கூறினர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News