திருக்கோவிலூர் அருகே கட்டாய தாலிகட்டி பெண்ணை கொடுமைபடுத்திய வாலிபர் கைது
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள அப்பனந்தல் பில்ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் சசிகலா (வயது 17) ஆவார். இவரை அதே ஊரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் கடத்திச்சென்று, கட்டாய தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார்.
மேலும் சசிகலாவை திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பி கொடுமைபடுத்தியதுடன், பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கிவரச் சொல்லியும் கொடுமைபடுத்தியிருக்கின்றார். அத்துடன் ஜானகிராமனின் தந்தை திருவேங்கடம், தாய் சந்திரா, தம்பி சீத்தாராமன் ஆகியோரும் சேர்ந்து சசிகலாவை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் வேதனை அடைந்த சசிகலா தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமதி, ஏட்டு கோகிலா ஆகியோர் விரைந்து சென்று ஜானகிராமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். ஜானகிராமனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் ஜானகி ராமனின் பெற்றோர் திருவேங்கடம், சந்திரா, தம்பி சீத்தா ராமன் ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர்.