செய்திகள்
சோளிங்கர் அருகே ரெயிலில் சிக்கி வாலிபர் பலி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
மதுரையில் இருந்து காட்பாடி, அரக்கோணம், வழியாக சென்னை சென்று அங்கிருந்து டேராடூன் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சோளிங்கர் அடுத்த சித்தேரியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ரெயில் என்ஜீனில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த என்ஜீன் டிரைவர் அரக்கோணம் ரெயில்வே நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.
மதுரையில் இருந்து காட்பாடி, அரக்கோணம், வழியாக சென்னை சென்று அங்கிருந்து டேராடூன் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சோளிங்கர் அடுத்த சித்தேரியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ரெயில் என்ஜீனில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த என்ஜீன் டிரைவர் அரக்கோணம் ரெயில்வே நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.