செய்திகள்

காரம்பாக்கம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு - 2 பேர் கைது

Published On 2018-11-21 14:50 IST   |   Update On 2018-11-21 14:50:00 IST
காரம்பாக்கம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

போரூர் காரம்பாக்கம் சமயபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பொம்மியம்மாள் (75).

இவரது வீட்டுக்குள் நேற்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை பொம்மியம்மாள் மீது தூவினார். பின்னர் அவர் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்றான்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொம்மியம்மாள் வீட்டின் எதிர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது உடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது.

இதில் ஒருவன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News