செய்திகள்

நிலக்கோட்டையில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்

Published On 2018-11-19 17:19 GMT   |   Update On 2018-11-19 17:19 GMT
நிலக்கோட்டையில் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கி நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பானு (வயது 30). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்தவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு பானுவின் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் பானுவுக்கும் சர்புதீன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களை கண்டித்தனர்.

இதனால் பானு தனது கள்ளக்காதலனுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது சகோதரர் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News