செய்திகள்

தருமபுரியில் இன்று ஆட்டோ கவிழ்ந்து 2 பெண்கள் படுகாயம்

Published On 2018-11-19 13:20 GMT   |   Update On 2018-11-19 13:20 GMT
தருமபுரியில் பயணிகள் ஏற்றுவதில் முந்தி செல்லும் போது அடுத்தடுத்து 2 ஆட்டோக்கள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
தருமபுரி:

தருமபுரி-சேலம் செல்லும் சாலையில் தொழில் மையத்தில் இருந்து எர்ஏ பட்டி பஸ் நிறுத்தம் இடையே இன்று காலை ஆட்டோக்களில் பயணிகள் ஏற்றுவதில் முந்தி செல்லும் போது அடுத்தடுத்து 2 ஆட்டோக்கள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக 2 ஆட்டோ டிரைவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News