செய்திகள்

ராணிப்பேட்டை அருகே பைக் மீது பஸ் மோதி பெண் பலி

Published On 2018-11-19 11:25 GMT   |   Update On 2018-11-19 11:25 GMT
ராணிப்பேட்டை அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை அடுத்த அவரக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி உமாராணி (வயது 45). ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை உமாராணியை கம்பெனியில் விட்டு வருவதற்காக லோகநாதன் பைக்கில் அழைத்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ் பைக் மீது மோதியது.

இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் உமாராணி சம்பவ இடத்திலேயே இறந்தார். லோகநாதன் படுகாயமடைந்தார்.

ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவரை மீட்டு, வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News