செய்திகள்
மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதி- பயணிகள் குற்றச்சாட்டு
மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாதவரம்:
மாதவரம் ரவுண்டானா அருகே நவீன அடுக்குமாடி பஸ் நிலையம் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திறக்கப்பட்டது.
இங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, தெலுங்கானா போன்ற இடங்களுக்கும் மற்றும் புறநகர் பகுதிக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன
இங்கு தினமும் ஏராளமான பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.
பஸ்நிலையம் உள்ளே அமைக்கப்பட்டிருக்கின்ற கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவசர தேவைக்கான குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை.
பால், மருந்து, மாத்திரை வாங்க வேண்டும் என்றாலும் கூட ரோட்டை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக ஏ.டி.எம். வசதி இல்லை.
இதனால் பெரும்பாலும் மக்கள் பணம் எடுக்கவும் அவசர தேவைக்கு பொருட்களை வாங்கவும் ரோட்டை கடந்து செல்கிறார்கள்.
எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாதவரம் ரவுண்டானா அருகே நவீன அடுக்குமாடி பஸ் நிலையம் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திறக்கப்பட்டது.
இங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, தெலுங்கானா போன்ற இடங்களுக்கும் மற்றும் புறநகர் பகுதிக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன
இங்கு தினமும் ஏராளமான பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.
பஸ்நிலையம் உள்ளே அமைக்கப்பட்டிருக்கின்ற கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவசர தேவைக்கான குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை.
பால், மருந்து, மாத்திரை வாங்க வேண்டும் என்றாலும் கூட ரோட்டை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக ஏ.டி.எம். வசதி இல்லை.
இதனால் பெரும்பாலும் மக்கள் பணம் எடுக்கவும் அவசர தேவைக்கு பொருட்களை வாங்கவும் ரோட்டை கடந்து செல்கிறார்கள்.
எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.