செய்திகள்

புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் அபராதம் இன்றி செலுத்தலாம்- மின்வாரிய அதிகாரி அறிவிப்பு

Published On 2018-11-19 08:26 GMT   |   Update On 2018-11-19 08:26 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் அபராதம் இன்றி 30-ந்தேதி வரை செலுத்தலாம் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். #GajaCyclone
சென்னை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்கள் கஜா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் இந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய பொது மக்கள் அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த 30-ந் தேதி வரை செலுத்தலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone
Tags:    

Similar News