செய்திகள்

ஆதம்பாக்கத்தில் காலி சிலிண்டரை வாங்கி 50 பேரிடம் மோசடி

Published On 2018-11-18 19:16 IST   |   Update On 2018-11-18 19:16:00 IST
ஆதம்பாக்கத்தில் காலி சிலிண்டரை வாங்கி 50 பேரிடம் மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #gascylinder

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி, நியூ காலனி போன்ற பகுதியிலிருந்து வீடுகளில் சமையல் கியாஸ் போடுபவர் கியாஸ் சிலிண்டரை வாங்கிக் கொண்டு திருப்பி தரவில்லை என்று ஆதம்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீடுகளில் சிலிண்டர் போடுபவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். வெங்கடேசன் (40) பிடித்து விசாரணை செய்யும்போது அவர் வழக்கமாக போடும் வீடுகளில் சென்று காலியான சிலிண்டர் வாங்கிக் கொண்டு புது சிலிண்டர் தருவதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது.

அவர் சுமார் 50 சிலிண்டருக்கு மேல் திருடி இருக்கிறார். இதுகுறித்து அவர் வேலை செய்யும் கியாஸ் ஏஜென்சியில் விசாரித்த போது வெங்கடேசன் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாகவே வேலையை விட்டு நின்று விட்டார் என்று கூறினர்.

ஆனால் போலீசார் சிலிண்டரை கொடுத்த வீடுகளில் விசாரித்தபோது வெங்கடேசன் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சிலிண்டர் போடுவதாகவும் பழக்கத்தின் பேரில் காலி சிலிண்டரை கொடுத்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் வெங்கடேசன் பில் வைத்துதான் சிலிண்டர் விநியோகித்து வந்தார் என்று தெரிய வந்திருக்கிறது.

கியாஸ் ஏஜென்சியோ ஒன்றரை வருடத்திற்கு முன்பே வேலை விட்டு நின்று விட்டார் என்று கூறுகிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பாக வேலையை விட்டு நின்ற அவருக்கு எப்படி ஒரிஜினல் பில் கிடைக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #gascylinder

Tags:    

Similar News