செய்திகள்
தேனி-கம்பத்தில் கஞ்சா விற்ற கும்பல் கைது
தேனி மற்றும் கம்பத்தில் கஞ்சா விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் கம்பம் மெட்டு 18-ம் கால்வாய் பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற சிவசாமி மற்றும் கேரளாவை சேர்ந்த சாபு ஆகியோர் தப்பி ஓட முயன்றனர். இதில் சாபுவை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தேனி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையிலான போலீசார் உழவர்சந்தை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற இளங்கோவன் என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு வாங்கி வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.