செய்திகள்

கறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2018-11-15 16:57 GMT   |   Update On 2018-11-15 16:57 GMT
கறம்பக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து பள்ளியின் வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகளை புறகணித்து பள்ளியின் வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச லேப்டாப், மிதிவண்டி, குடி தண்ணீர் மற்றும் பஸ் பாஸ், பள்ளிக்கு ஆசிரியர் பற்றாக்குறை, சிறு சிறு அடிப்படை வசதிகள் இவைகள் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கோஷமிட்டனர். பின்னர் பள்ளியின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் கார்த்திக்சாமி சப் இன்ஸ்பெக்டர் பெரிய சாமி, மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் 15 தினங்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்றி வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு வகுப்பிற்கு சென்றனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News