செய்திகள்

குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 48 பேருக்கு இலவச விமான பயணம்

Published On 2018-11-14 07:19 GMT   |   Update On 2018-11-14 07:32 GMT
குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 48 பேர் இலவச விமான பயணம் மேற்கொண்டனர். #JawaharlalNehru #ChildrensDay

ஆலந்தூர்:

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை விமான நிலையம் இன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் ஆகியவற்றுடன் இணைந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கனவு பயணம் என்ற இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதற்காக விமான நிலையம் அருகே உள்ள அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 48 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திற்கு காலை அழைத்துவரப்பட்டனர்.

 


சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் விமானத்தில் அவர்கள் சுமார் 45 நிமிடம் பயணம் செய்தனர். காலை 9.45 மணிக்கு புறப்பட்டு சென்ற அவர்கள் மீண்டும் 10.30 மணிக்கு சென்னை திரும்பினர்.

இதில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆச்சரியத்துடனும் பயணம் செய்தனர். #JawaharlalNehru #ChildrensDay

Tags:    

Similar News