செய்திகள்

அரியலூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2018-11-13 17:54 GMT   |   Update On 2018-11-13 17:54 GMT
அரியலூர் அருகே மணல் கடத்தியது தொடர்பாக லாரியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
அரியலூர்:

அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் மாங்காய்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் லாரி டிரைவரான பெரம்பலூரை சேர்ந்த சிவபாலன்(வயது 34), கிளனர் கண்ணன்(44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து லாரி உரிமையாளரான சுரேஷ்(32) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News