செய்திகள்

பொம்மிடி அருகே தச்சு தொழிலாளி தற்கொலை

Published On 2018-11-12 16:39 GMT   |   Update On 2018-11-12 16:39 GMT
பொம்மிடி அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த தச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி:

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 41), தச்சு தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் 10-ம் வகுப்பும், 2-வது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வெளியூருக்கு சென்றுவிடுவார். பின்னர் ஒருவாரம், 10 நாள் கழித்து வீட்டுக்கு வருவார்.

இதேபோல மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வெளியூர் சென்ற அவர் வீட்டுக்கு வந்தார். குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றும், இனிமேல் சேர்ந்து வாழலாம் என்றும் மனைவியிடம் கூறினார். ஆனால் அவரது பேச்சை மனைவி நம்பவில்லை. உறவினர்களை அழைத்து பேசி பின்னர் சேர்ந்து வாழலாம் என்று கூறி விட்டார். இதனால் மனம் உடைந்த சரவணன் வீட்டுக்குள் சென்று திடீரென்று அங்குள்ள ஓட்டு வீடு மரத்தில் மனைவி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சரவணன் பிணத்தை கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News