செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி

Published On 2018-11-12 09:33 GMT   |   Update On 2018-11-12 09:33 GMT
முதலமைச்சர் பாதுகாப்பு பணி முடிந்து வீடு திரும்பிய போலீஸ்காரர் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்தார்.
சென்னை:

தண்டையார்பேட்டை சின்னசாமி தெருவை சேர்ந்தவர் தேஸ்குமார் (40). இவர் பெரியமேடு போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக இருந்தார். கடந்த 8-ந்தேதி அன்று தலைமை செயலகம்-போர் நினைவு சின்னம் இடையே முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதனால் தலை மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், வித்யா ஸ்ரீ (8), யுவஸ்ரீ (7), என்ற 2 மகள்களும், தர்மிக் என்ற 8 மாத ஆண்குழந்தையும் உள்ளன. #tamilnews
Tags:    

Similar News