செய்திகள்

ஒருதலைக்காதல் விவகாரம்: மாநகராட்சி ஊழியர் வி‌ஷம் குடித்து பலி

Published On 2018-11-09 14:23 GMT   |   Update On 2018-11-09 14:23 GMT
ஒருதலைக்காதல் விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை கல்மேடு டேவிதார் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 20). மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் இவரை காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துக்குமார் வி‌ஷம் குடித்தார். அவரை உடனடியாக அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக முத்துக்குமாரின் தாய் முருகேஸ்வரி சிலைமான் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News