செய்திகள்
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
தன் மீதான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MaFoiPandiarajan #HighCourt
சென்னை:
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜனும் திமுக சார்பில் நாசரும் ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டனர்.
அந்த தேர்தலில் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார். இந்த வெற்றி எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்திற்கு பின்னர் மாஃபா பாண்டியராஜன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MaFoiPandiarajan #HighCourt