செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
கிருஷ்ணகிரி அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள தின்னகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன்(28). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா(26). இவர்களுக்கு திருமணமாகி சுஜிதா(6) என்கிற மகள், பீன்ஆனந்த்(2) என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சின்னையனுக்கும், புஷ்பாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் கடந்த மாதம் 30-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து கோவித்து கொண்டு புஷ்பா தனது 2 குழந்தைகளுடன் வெளியில் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பாவின் தந்தை வெங்கடாசலம், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.