செய்திகள்

பிரான்சில் கல்வி பயில இந்தியாவில் இருந்து 10 ஆயிரம் பேருக்கு விசா - துணைத்தூதர் தகவல்

Published On 2018-11-03 07:35 GMT   |   Update On 2018-11-03 07:35 GMT
பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து விசா பெறும் வாய்ப்பு உள்ளதாக துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு கூறியுள்ளார். #studentvisa

புதுச்சேரி:

பிரான்ஸ் நாட்டுக்கான தமிழக- புதுவை துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரான்சுக்கு கல்வி கற்கவும், வர்த்தகம், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்சுக்கு சராசரி வருகையாளர் எண்ணிக்கை தற்போது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

வருகிற 2020-ம் ஆண்டில் பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து விசா பெறும் வாய்ப்பு உள்ளது.


பிரான்ஸ் தூதரகத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்கும் முறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் புதுவையில் இருந்து பிரான்ஸ் செல்ல விசா விண்ணப்பங்கள் எண்ணிக்கை 34 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தென் இந்தியாவிலேயே அதிக அளவில் புதுவையில் இருந்து விண்ணப்பிக்கின்றனர்.

கொச்சியில் இது 51 சத வீதமாகவும், சென்னையில் 39 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #studentvisa

Tags:    

Similar News