செய்திகள்

வானகரத்தில் போதை பாக்கு தயாரித்து விற்றவர் கைது

Published On 2018-11-02 09:26 GMT   |   Update On 2018-11-02 09:26 GMT
வானகரத்தில் போதை பாக்கு தயாரித்து விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வானகரம், சுப்பிரமணியம் தெருவில் உள்ள வீட்டில் போதை பாக்கு தயாரித்து விற்ற மகாராஷ்டிராவை சேர்ந்த ஜித்தேந்தர் உமர் பட்டேலை கடந்த சில நாட்களக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவரது கூட்டாளி உதய்பான் பட்டேல் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் வானகரம் பகுதியில் மீண்டும் போதை பாக்கு தயாரித்து விற்ற உதய்பான் பட்டேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News