செய்திகள்

முத்துப்பேட்டையில் பெண்ணிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது

Published On 2018-10-31 11:29 GMT   |   Update On 2018-10-31 11:29 GMT
முத்துப்பேட்டையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே குன்னலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி சித்ரா (வயது 32). இவர் கடந்த 29-ந்தேதி மொபட்டில் முத்துப்பேட்டைக்கு வந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் இருவர் பின் தொடர்ந்து வந்து வழி மறித்து அவரது கைப்பையை பறித்து சென்றனர். இது குறித்து சித்ரா இடையூர் போலீசில் புகார் செய்தார். கைப்பையில் செல்போன், செக், பணம் இருந்ததாக தெரிவித்து இருந்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் இருவரும் முத்துப்பேட்டை சேர்ந்த அசாரூதீன் (16), முகமது அலி உசேன் (22). என்பதும் இருவரும் சித்ராவிடம் வழிபறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News