செய்திகள்
காட்பாடியில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு
காட்பாடியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்து விட்டு தப்பி சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
வேலூர்:
காட்பாடி மதிநகரை சேர்ந்தவர் சம்பத் இவரது மனைவி செல்வி (வயது 48). இவர் இன்று காலை ஓடைபிள்ளையார் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர் திடீரென செல்வி அணிந்து இருந்த 3பவுனை செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.
அதிர்ச்சியடைந்த செல்வி திருடன், திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து செல்வி விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.