செய்திகள்
திருப்பத்தூரில் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை
திருப்பத்தூரில் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் குட்ட ப்பனூர் தெருவை சேர்ந்தவர் சரவணன். பாத்திரக்கடை தொழிலாளி. இவருடைய மனைவி ஆர்த்தி. இவர்களது மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கிறாள்.
நேற்று மதியம் குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டின் கதவை பூட்டாமல் ஆர்த்தி பள்ளிக்கு உணவு எடுத்து சென்றார்.
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 7 பவுன் நகை திருடு போயிருந் தது. இதுகுறித்து, திருப்பத்தூர் டவுன் போலீசில் ஆர்த்தி புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் டவுன் குட்ட ப்பனூர் தெருவை சேர்ந்தவர் சரவணன். பாத்திரக்கடை தொழிலாளி. இவருடைய மனைவி ஆர்த்தி. இவர்களது மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கிறாள்.
நேற்று மதியம் குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டின் கதவை பூட்டாமல் ஆர்த்தி பள்ளிக்கு உணவு எடுத்து சென்றார்.
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 7 பவுன் நகை திருடு போயிருந் தது. இதுகுறித்து, திருப்பத்தூர் டவுன் போலீசில் ஆர்த்தி புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.