செய்திகள்

கம்பம் அருகே இளம்பெண் மாயம்

Published On 2018-10-30 16:38 IST   |   Update On 2018-10-30 16:38:00 IST
கம்பம் அருகே 25 பவுன் நகை மற்றும் பணத்துடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

கம்பம் அருகே சுப்பையன் சேர்வை சந்து பகுதியை சேர்ந்தவர் அமாவாசி. இவரது மகள் கார்த்திகா (வயது25). இவருக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில வருடங்களாக தனது தந்தை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.

சம்பவத்தன்று இரவு வீட்டில் கார்த்திகா மற்றும் அவரது தந்தை தூங்கிக்கொண்டிருந்தனர். காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.43 ஆயிரம் பணம் மற்றும் 25 பவுன் நகையுடன் கார்த்திகா மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தந்தை அமாவாசி கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News