செய்திகள்

விருத்தாசலம் அருகே தனியார் பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்- 3 பேர் படுகாயம்

Published On 2018-10-29 10:44 GMT   |   Update On 2018-10-29 10:44 GMT
விருத்தாசலம் அருகே தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருத்தாசலம்:

பண்ருட்டியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று இரவு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திருக்கோவிலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி ஒரு கார் சென்றது. இந்த காரில் 2 பெண் உள்ளிட்ட 4 பேர் வந்தனர்.

இந்நிலையில் இந்த கார் அரசகுழி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தினால் அப்பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஊ.மங்கலம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News