செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி- மற்றொருவர் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு:
காங்கயம் அருகே உள்ள வீராணம்பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ்(வயது 25) பட்டதாரி. இவரது நண்பர் செந்தில்குமார்(26) இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களது 2 பேரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் காங்கயத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
நல்லிபாளையம் பிரிவில் வந்த போது நிலைத்தடுமாறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதில் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். சுபாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.