தினகரன் அணி ஒரு பிராய்லர் கோழி - வைகை செல்வன்
சேலம்:
அ.தி.மு.க. 47-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் சேலம், அஸ்தம்பட்டி மணக்காட்டில் நடந்தது.
இந்த பொதுகூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகை செல்வன் பேசும்போது, தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் கடன் தாரர்கள் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். இவர்களால் கட்சியை நடத்த முடியுமா? அதே போல் தினகரனும் ஓட்டு போட்டவர்களுக்கு கடன் வைத்துள்ளார். ரூ.20 ரூபாய் கொடுத்து ரூ.10 ஆயிரம் தருவதாக உறுதி கூறி ஓட்டையும் பெற்று கொண்டு ஏமாற்றி வருகிறார். இவர்களா தமிழகத்தை ஆள போகிறார்கள்?
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்.கள் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். பதவி தருவதாக கூறி தினகரன் அவர்களை ஏமாற்றிவிட்டார்.
தினகரன் அணி ஒரு பிராய்லர் கோழி. முட்டை போடாது, குஞ்சு பொறிக்காது, கறிக்கு மட்டும் தான் உதவும். தினகரனுக்கு அரசியல் தெரியவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்காக முள்கிரீடத்தை சுமக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினர். #Vaigaichelvan #ADMK #TTVDhinakaran