செய்திகள்

நெய்வேலி அருகே லாரி மோதி என்ஜினீயர் பலி

Published On 2018-10-24 14:27 GMT   |   Update On 2018-10-24 14:27 GMT
நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள கொம்பாடிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மின்என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரும் நண்பர்கள்.

இவர்கள் 2 பேரும் விருத்தாசலத்தில் இருந்து கொம்பாடிகுப்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டினார். அந்த மோட்டார் சைக்கிள் நெய்வேலி அடுத்த சாத்தமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மகேஷ் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பலத்த காயம் அடைந்த மகேசை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News