பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொன்ற தந்தை
தேனி:
தேனி அருகே சின்னமனூர் பத்திரகாளிபுரம் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் ஈஸ்வரன் (வயது36). ஈஸ்வரன் குடி பழக்கத்திற்கு ஆளானதால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. பணம் தர மறுத்தால் போசை கொன்று விடுவதாக ஈஸ்வரன் மிரட்டி உள்ளார். குடி பழக்கத்திற்கு ஆளான மகனால் போஸ் நிம்மதி இழந்தார்.
சம்பவத்தன்று ஈஸ்வரன், போசிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். தர மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த போஸ் அருகில் இருந்த கல்லை எடுத்து ஈஸ்வரனை கடுமையாக தாக்கினார். படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து போஸ் பூலாநந்தபுரம் வி.ஏ.ஓ. கல்யாணியிடம் ஒப்புதல் வாக்குமுலம் அளித்தார். வி.ஏ.ஓ. புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் போசிடம் விசாரித்து வருகின்றனர்.