செய்திகள்
குலசை கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 4 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு
திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் குலசை கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 4 1/2 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள பேயன்விளையை சேர்ந்தவர் சுடலை. இவர் தனது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலை குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு செல்வதற்காக திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறினார். அப்போது அங்கு ஏராளமான கூட்டம் இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பஞ்சவர்ணம் கழுத்தில் கிடந்த 41/2 பவுன் தாலி செயின் பறித்து சென்று விட்டனர்.
பஸ் ஏறிய பின்னர் தனது நகை பறிபோனதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த பஞ்சவர்ணம் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.