செய்திகள்

கருங்கல் அருகே மூதாட்டி மர்ம மரணம்

Published On 2018-10-19 17:17 GMT   |   Update On 2018-10-19 17:17 GMT
கருங்கல் அருகே தோட்டத்தில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்த கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்:

கருங்கலை அடுத்த கப்பியறை பகுதியை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை. இவரது மனைவி அவ்வையார் (வயது 92). இவர் சம்பவத்தன்று பருத்திக்காட்டு பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது சில வாலிபர்கள் அவரை தாக்கியதாக தெரிகிறது.

பின்னர் வீடு திரும்பிய மூதாட்டி அவ்வையார் நேற்று வீட்டின் அருகே ஒரு தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  

இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News