செய்திகள்

தண்டையார்பேட்டையில் 60 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல்

Published On 2018-10-19 10:10 GMT   |   Update On 2018-10-19 10:10 GMT
தண்டையார்பேட்டையில் 60 கிலோ செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4-வது தெரு வில் உள்ள ஒரு வீட்டில் செம்மரக்கட்டையை பதுக்கி வைத்திருப்பதாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது ஷாகுல் என்பவருடைய வீட்டில் 60 கிலோ செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட் டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் போது ஷாகுல் வீட்டில் இல்லை. அவருடைய மனைவியிடம் ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News