செய்திகள்
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRains #IMDChennai
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொருத்தவரை கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் 21ம் தேதி வரை லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செமீ மழை பெய்துள்ளது. ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 செமீ மழை பதிவாகி உள்ளது. #TNRains #IMDChennai
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொருத்தவரை கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் 21ம் தேதி வரை லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செமீ மழை பெய்துள்ளது. ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 செமீ மழை பதிவாகி உள்ளது. #TNRains #IMDChennai