செய்திகள்

தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டிட தொழிலாளர்கள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்

Published On 2018-10-17 11:31 GMT   |   Update On 2018-10-17 11:31 GMT
ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்பை இழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

மணல் பிரச்சினையால் ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்பை இழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பீட்டு நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

மணல் பிரச்சினையை தீர்த்திட புதுவை அரசே மணல் விற்பனை செய்ய வேண்டும். அக்டோபர் மாதம் வரை உறுப்பினர் விண்ணப்பம் கொடுத்த அனைவருக்கும் தீபாவளி பணம் வழங்க வேண்டும். தீபாவளி பரிசு கூப்பனுக்கு பதிலாக ரொக்கமாக வங்கியில் செலுத்த வேண்டும். தீபாவளி உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி புதுவை மாநில கட்டிடக்கலை தொழிலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரியார் சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு சங்க தலைவர் அய்யம்பெருமாள், பொதுச்செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலம் காமராஜர் சாலை, நேருவீதி, மி‌ஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி. செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேது செல்வம், பொருளாளர் ஜெயபாலன், செயலாளர் நளவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். #tamilnews
Tags:    

Similar News